சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலையுதிர் கால அறுவடைப் பணிகள் - 34 சதவிகித பணிகள் நிறைவடைந்ததாக அறிவிப்பு
Oct 3 2022 6:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் இலையுதிர்கால அறுவடைப் பணிகளில் 34 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாக அந்நாட்டு அரசுச் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இலையுதிர் காலத்திற்கான பருவத்தில் சுமார் 7 கோடியே 42 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், நாடு முழுவதும் நடைபெறும் இப்பணிகளில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தானியங்கள் அறுவடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோயா பீன்ஸ், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே விளைந்திருப்பதாகவும், சில பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மையில் நவீனத்தைப் புகுத்துவதற்காக அந்நாட்டு வேளாண் கடனுதவி அளிக்கும் வங்கிகள் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை விவசாயிகளுக்கு கடனாக அளித்துள்ளதாகவும், அறுவடைப் பணிகளைப் பொறுத்தளவில் தற்போது வரை 34 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.