ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் உக்ரைன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது - பிரதமர் மோடியுடன் ஜெலன்ஸ்கி தொலைபேசி உரையாடல்
Oct 5 2022 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் உக்ரைன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் திரு.மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அவர் இதனை குறிப்பிட்டார். அப்போது உக்ரைனின் இறையான்மைக்கும், எல்லை சார்ந்த ஒருமைப்பாட்டுக்கும் இந்தியா ஆதரவாக இருந்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். போரிடுவதற்கான நேரம் இதுவல்ல என பிரதமர் மோடி ஏற்கெனவே கூறியதையும் ஜெலன்ஸ்கி அப்போது நினைவு கூர்ந்தார்.