அமெரிக்காவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட 4 இந்திய வம்சாவளியினரும் சடலமாக மீட்பு - மர்ம நபர்களின் கொடூர செயல்
Oct 6 2022 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட 4 இந்திய வம்சாவளியினரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த 36 வயதான ஜஸ்தீப் சிங், தனது மனைவி, 8 மாத குழந்தை மற்றும் உறவினர் ஒருவருடன் கலிஃபோர்னியாவில் வசித்து வந்தார். அவர்கள் 4 பேரும் கடந்த 3-ம் தேதி கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை தீவிரமாக தேடிவந்த போலீசார், காணாமல் போனவர்களில் ஒருவரது வாகனத்தை நேற்று கண்டுபிடித்தனர். இந்நிலையில், கலிஃபோர்னியாவில் கடத்தப்பட்ட 4 அமெரிக்க வாழ் இந்தியர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் அங்கு வசிக்கும் சக இந்திய வம்சாவளி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.