இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்சின் எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு வழங்கப்படுகிறது - 'L Occupation' என்ற நாவலுக்காக நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக்குழு
Oct 6 2022 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்தாண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 'L Occupation' என்ற நாவலுக்காக நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ஆனி எர்னாக்ஸ் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.