நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிப்புயல் வீசுவதால் மக்கள் பாதிப்பு : பனிப்புயல் காரணமாக வீடுகளில் முடங்கிய மக்கள்
Nov 21 2022 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்புயல் வீசுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு நியூயார்க் நகரில் வீசி வரும் பனிப்புயலால் முக்கிய சாலைகள் மூடப்பட்டதுடன், பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் நிலவுகிறது. பனிப்புயலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், குடியிருப்புகளில் படர்ந்துள்ள பனியை அகற்றும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.