பனிச்சறுக்கு மையங்களுக்கு படையெடுக்கும் சீன மக்கள் : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனிச்சறுக்கில் ஈடுபட்டு உற்சாகம்
Nov 21 2022 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் தற்போது பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், பனிச்சறுக்கு விடுதிகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றன. ஜிலின் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பனிச்சறுக்கு விடுதிகளில் மக்கள் குடும்பத்துடன் சென்று விளையாடி மகிழ்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட இடங்களில் உள்ள பனிச்சறுக்கு மையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. படர்ந்து விரிந்து கிடக்கும் பனியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமான பனிச்சறுக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பனிச்சறுக்கு மையங்களும் நவீன விளையாட்டுகளை அறிமுகம் செய்து வருகின்றன.