துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9-ஆக பதிவு - 22 பேர் காயம்
Nov 23 2022 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியின் டூஸ் நகரில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சக்தி வாய்ந்த் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5 புள்ளி 9-ஆக பதிவானதாகவும், கோலியாகா மாகாணத்தில், 6 புள்ளி 8 ஒன்று கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இஸ்தான்புல் மற்றும் துருக்கி தலைநகர் அங்காராவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் துருக்கி தேசிய பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.