வால்மார்ட் அங்காடியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு : 4 பேர் உயிரிழப்பு; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
Nov 23 2022 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வால்மார்ட் அங்காடியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிவுள்ளது. அங்காடிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம் நபர், கண்மூடித்தனமாக சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விர்ஜினியா போலீசார் தெரிவித்துள்ளனர்.