நேபாள நாடாளுமன்ற தேர்தல் : பிரதமர் ஷேர் பகதூர் தூபா 7-வது முறையாக வெற்றி
Nov 23 2022 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அதோடு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். முடிவுகள் அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.