ஜெருசலம் நகரில் நிகழ்ந்த 2 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் : ஒருவர் பலி - மேலும் 12 பேர் படுகாயம்
Nov 23 2022 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெருசலம் நகரில் நிகழ்ந்த 2 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். ஜெருசலம் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், ஒரு பேருந்து நிலையம் அருகே முதல் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில், 7 பேர் படுகாயமடைந்தனர். அடுத்த அரை மணி நேரத்தில், ஜெருசலம் நகரின் வடக்குப் பகுதியில் Ramot சந்திப்பு அருகே 2-ஆவது குண்டு வெடித்தது. இச்சம்பவங்கள் பாலஸ்தீன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தத் தாக்குதலை பாலஸ்தீன படைகள் நடத்தியிருப்பதாகவும் இஸ்ரேல் போலீசார் தெரிவித்தனர்.