இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்து வெளியேறிய சாம்பல் சூழ்ந்த கிராமங்கள்
Dec 5 2022 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்துச் சிதறியதால் வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள கிராமங்களைச் சூழ்ந்துள்ள நிலையில், மீண்டும் எரிமலை வெடிக்கும் அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை நேற்று வெடித்து ஏராளமான சாம்பலை வெளியேற்றத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றிலும் எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையே, செமரு எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் படிந்து எங்கு பார்த்தாலும் வெண்மையாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில், மீண்டும் எரிமலை வெடிக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் மூழ்கியுள்ளனர்.