உக்ரைன் நாட்டில் ராணுவ தாக்குதல் எதிரொலி - ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கிப் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Dec 7 2022 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கிப் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாஸ்கோ நகருக்கு வெளியில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இதற்கான பயிற்சி மையத்தையே நடத்திவருகிறார். இப்பயிற்சியில் ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், நெடுந்தொலைவில் உள்ள பொருட்களைக் குறி பார்த்துச் சுடுவதற்கான துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி மையத்தில் ஏராளமான இளம் பெண்களும், இளைஞர்களும் பங்கேற்று பயிற்சி பெற்றுவருகின்றனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்வரி மாதம் போர் தொடுத்து, தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இது போன்ற பழக்கம் ரஷ்யர்களிடையே அதிகரித்து வருகிறது.