நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சிப்ரோ நகருக்கு தென்மேற்கே நிலநடுக்கத்தின் மையப்பகுதி
Jan 24 2023 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிலநடுக்கத்தின் அதிர்வு தலைநகர் டெல்லி, உத்தரகாண்டிலும் உணரப்பட்டது
நேபாளத்தில் இன்று பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வு நாட்டின் தலைநகர் டெல்லியிலும் எதிரொலித்தது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 8 ஆக பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதி சிப்ரோ நகருக்கு 25 கிலோ மீட்டர் தென்மேற்கில் காணப்பட்டது. நேபாள நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள வீடுகள் குலுங்கின.