பூமியின் உள்ளே மையப்பகுதி எதிர்த்திசையில் சுழலத் தொடங்கி உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்
Jan 25 2023 8:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பூமியின் உள்ளே மையப்பகுதி எதிர்த்திசையில் சுழலத் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் உலகம் அழிந்து விடுமா என்ற அச்சம் சிலருக்கு எழுந்துள்ளது.
பூமியின் மையப்பகுதி தரை மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் கிலோமீட்டர் கீழே உள்ளது. இந்தப்பகுதியின் சுழற்சி திசையில் மாற்றம் ஏற்படப் போவதாக விஞ்ஞானிகள் மற்றும் நில அதிர்வு நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இது நடக்கும் முன், உள் மையம் சிறிது நேரம் சுழலும். நேச்சர் ஜியோசைன்ஸில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பூமியின் மையத்தின் சுழற்சி காரணமாக, மேற்பரப்பு நிலைத்தன்மையைப் பெறுகிறது. ஒவ்வொரு 70 வருடங்களுக்கும் மையத்தின் சுழற்சியின் திசை மாறுகிறது. இந்த மாற்றம் சுமார் 17 ஆண்டுகளுக்குள் நிகழும் மற்றும் பூமியின் மையம் எதிர் திசையில் சுழல ஆரம்பிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.