ரஷியா நடத்திய ஏவுகணை, டிரோன் தாக்குதல் : உக்ரைனில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல்
Jan 27 2023 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைனுக்கு தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன டாங்கிகள் அனுப்ப உள்ளதாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகள் அறிவித்தன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.