இஸ்ரேல் நாட்டு தேவாலயத்தில் பேரின அழிப்பு நினைவு நாள் பிரார்த்தனையின் போது தீவிரவாதத் தாக்குதல் : 8 பேர் உயிரிழப்பு; பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்
Jan 28 2023 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் நாட்டு தேவாலயத்தில் பேரின அழிப்பு நினைவு நாள் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் உள்ள தேவாலயத்தில் நடந்த இத்தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர், பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியை இஸ்ரேல் போலீசார் சுட்டுக் கொன்றனர். மேற்குக் கரை மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் அந்நாட்டு அரசு நிலையான குடியிருப்புக்களை ஏற்படுத்திவருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் ராணுவத்தின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் ராணுவ நடவடிக்கையில் பாலஸ்தீனர்கள் உயிரிழக்கும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது.