இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் 13ஏ சட்டப்பிரிவு அமல்படுத்தப்படும் : அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டம்
Jan 28 2023 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் 13ஏ சட்டப்பிரிவு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார். இலங்கையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய அவர், அதிபர் என்ற முறையில், நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதாகவும், அதன்படி, இலங்கையில் தமிழர்களின் அரசியல் சுயாட்சிக்கு அதிகாரம் வழங்கும் 13ஏ சட்டப்பிரிவு முழுமையாக திருத்தங்கள் இன்றி முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை முழுமையாக அமல்படுத்த யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அச்சட்டத்தை ரத்து செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார். பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவித்தார். கடந்த 1987ல் இந்தியா நேரடி தலையீட்டின்பேரில், 13ஏ சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது.