கனமழை வெள்ளத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்த ஆக்லாந்து-3 பேர் உயிரிழப்பு - மழை வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த நியூசி.பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்
Jan 29 2023 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனமழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள ஆக்லாந்து நகரை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுவரை 3 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சேதங்களை ஆய்வு செய்த பின் நகரை தூய்மைப்படுத்துவதே பெரிய வேலையாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டார். அண்மைக்காலத்தில் முன்னோடியில்லாத நிகழ்வு என்றாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனிடையே ஆக்லாந்து உள்நாட்டு விமான நிலைய முனையம் மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் மேலும் கனமழைக்கு வாய்பபுள்ளதாக நியூசிலாந்து வானிலை மையம் எச்சரித்துள்ளது.