தான் கொலை செய்யப்பட்டாலும், அடிமை வாழ்வை மட்டும் மக்கள் ஏற்கவேகூடாது - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உருக்கம்
Mar 15 2023 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தான் கொலை செய்யப்பட்டாலும், அடிமை வாழ்வை மட்டும் மக்கள் ஏற்கவே கூடாது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது வெளியில் உள்ளார். இந்நிலையில், இம்ரான்கான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனது வீட்டை ஆட்கள் சுற்றிவளைத்து இருப்பதாகவும், தான் கொல்லப்படலாம் என்றும் கூறியுள்ளார். ஒருவேளை கொல்லவில்லை எனில், சிறையில் தள்ள முடிவு செய்துவிட்டனர் என்றும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். முடிவாக, தன்னை கொன்றதுடன், அவர்களது வேலை முடிந்தது என நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பதிலளிக்க வேண்டும் என இம்ரான்கான் கூறியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.