டோக்கியோவில் மரங்களில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்கள் : சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்
Mar 15 2023 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். டோக்கியோவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் செர்ரி பூக்களின் சீசன் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே செர்ரி பூக்கள் மரங்களை அலங்கரித்துள்ளன. சீசன் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே செர்ரி பூக்கள் பூத்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூங்காங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று செர்ரி பூக்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதனிடையே காலநிலை மாற்றத்தால் செர்ரி சீசன் முன்கூட்டியே தொடங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.