பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வீட்டு நுழைவாயில் முன் கண்டெய்னர் பாதுகாப்பு - கைது நடவடிக்கையை தடுக்க கட்சித் தொண்டர்கள் ஏற்பாடு
Mar 17 2023 8:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் கைது செய்து விடாமல் தடுக்க அவர் வீட்டின் நுழைவாயில் முன் பெரிய பெரிய கண்டெய்னர்களை அவரது கட்சித் தொண்டர்கள் கொண்டு வைத்து வைத்துள்ளனர். மேலும் பாதுகாப்புக்கு கம்புகளை ஏந்தியவாறு அந்த பகுதியில் திரண்டுள்ளனர். லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று வரை இம்ரான் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படாது என்றாலும் அவரது வீட்டையொட்டிய அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதால் இடத்தை விட்டு நகரப் போவதில்லை என இம்ரான்கான் கட்சித் தொண்டர்கள் உறுதி காட்டி வருகின்றனர்.