உக்ரைனில் பரந்த அளவிலான போர்க்குற்றங்களை செய்துள்ளது ரஷ்யா - ஐநா அமைத்த புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் தகவல்
Mar 17 2023 8:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைனில் கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் போன்ற பரந்த அளவிலான போர்க் குற்றங்களை ரஷ்யா செய்துள்ளதாக ஐ.நா அமைத்த புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட நேர்காணல்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தடுப்புக்காவல் தளங்கள் மற்றும் கல்லறைகளுக்குச் சென்றதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதற்காகவும் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்ததற்காகவும் ரஷ்ய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.