உக்ரைன் போர்க்குற்றவாளி என அறிவித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் : சர்வதேச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
Mar 18 2023 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய அதிபர் புதினை, போர்க் குற்றவாளி என அறிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, ஓராண்டைக் கடந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம், கிவ் உள்ளிட்ட நகரங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதனிடையே, உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில், ரஷ்ய அதிபர் புதின் போர்க்குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், புதினை கைது செய்யுமாறும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.