பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்தும் அரசு முடிவுக்கு கண்டனம் : அரசுக்கு எதிரான போராட்டங்களில் பொதுமக்கள், போலீசார் இடையே மோதல்
Mar 18 2023 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்தும் அரசின் முடிவை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் மூண்டது. அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து பாரிஸ் நகரில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கான்சார்ட் சதுக்கம் அருகே குப்பை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்தனர். 49:3 என அமைக்கப்பட்ட பதாகையை அவர்கள் எரித்ததுடன், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.