தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6 புள்ளி 8-ஆக பதிவு - இடிபாடுகளில் சிக்கி 12 பேர் பலி
Mar 19 2023 11:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. கடலோர குவாயாஸ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதனிடையே குவாயாஸ் பகுதியில் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ கேட்டுக் கொண்டுள்ளார்.