வங்கதேசத்தில், அதிக பாரம் காரணமாக, நடுரோட்டில் பேருந்து கவிழ்ந்து 16 பேர் பலி - தள்ளாடி வந்த பேருந்து, திடீரென சாலையில் கவிழ்ந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
Mar 19 2023 2:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கதேசத்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
பங்களாதேஷில் மாதரிப்பூர் மாகாணத்தில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்து குதுப்பூர் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.