போருக்கு மத்தியில் உக்ரைனின் மரியுபோல் நகருக்கு முதல்முறையாக சென்ற ரஷ்ய அதிபர் புதின்... ஆயிரக்கணக்கான குடும்பங்களை கொன்ற கொலைகாரன் வருகை தந்துள்ளதாக உக்ரைன் ஆவேசம்
Mar 20 2023 7:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் மரியுபோல் நகர பயணத்தை, குற்றம் நடந்த இடத்திற்கு குற்றவாளி திரும்பியுள்ளதாக உக்ரைன் சாடியுள்ளது. கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்த 9-ம் ஆண்டு விழாவுக்காக அங்கு சென்ற புதின் திடீரென உக்ரைனில் கைப்பற்றிய மரியுபோல் நகருக்குச் சென்று பொதுமக்களை சந்தித்துப் பேசினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் மைக்கைலோ போடோலியாக், ஆயிரக்கணக்கான மரியுபோல் குடும்பங்களைக் கொன்ற கொலைகாரன் நகரத்தின் இடிபாடுகளையும் அங்குள்ள கல்லறைகளையும் வருத்தமின்றி பார்க்க வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.