வங்கதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி: 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்
Mar 20 2023 8:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கதேசத்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். ஷிப்சர் மாவட்டம் மதரிபூரில் இருந்து பயணிகளுடன் டாக்காவை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து குதுப்பூர் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.