நீருக்கு அடியில் புதிய வகை அணு ஆயுத சோதனையை நடத்திய வடகொரியா - ட்ரோன் மூலம் சோதனை நடைபெற்றதாக அரசு ஊடகம் தகவல்
Mar 24 2023 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலுக்கடியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் ட்ரோன் சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் 60 மணி நேரம் கடலுக்கடியில் பயணித்த ஆளில்லா ட்ரோன் பின்னர் வெடித்து சிதறியது. தங்கள் நாட்டை கடல் வழியாக தாக்க நினைத்தால் கடலுக்கடியில் பாயும் ட்ரோன் வெடித்து கதிரியக்க சுனாமியை ஏற்படுத்தும் என சோதனைக்கு பின் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.