தாய்லாந்தில் பங்கி ஜம்ப்பிங்கின்போது நேரிட்ட விபரீதம் : கயிறு அறுந்து விழுந்ததால் நீரில் மூழ்கி உயிர் தப்பிய சுற்றுலா பயணி
Mar 24 2023 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்தில் bungee jumpல் ஈடுபட்ட சுற்றுலா பயணி அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.
பட்டாயா நகரில் bungee jumpல் ஈடுபட விரும்பிய சுற்றுலா பயணி ஒருவர் கிரேன் ஒன்றில் 10 அடுக்கு மாடி கட்டிட உயரத்தில் இருந்து தலைகீழாக குதித்தார். அப்போது குளத்தை நெருங்கியபோது திடீரென அவரது காலில் கட்டி இருந்த கயிறு அறுபட்டது. மிக வேகமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.