கனடாவில் மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் : பெயிண்ட்டை ஊற்றி காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டதால் அதிர்ச்சி
Mar 25 2023 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்டோரியோ நகரில் வெண்கலத்தால் ஆன 6 அடி உயர காந்தி சிலை உள்ளது. இந்த சிலையின் முகத்தில் பெயிண்டை ஊற்றி நாசம் செய்துள்ளனர். மேலும் இந்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்து சிலையின் அடிப்பாகத்தில் வாசகங்களை எழுதி வைத்தனர். காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியையும் பறக்கவிட்டிருந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.