ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிலும் நிலைநிறுத்தப்படும் - அதிபர் விளாதிமிர் புதின் அதிரடி அறிவிப்பு
Mar 26 2023 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிலும் நிலைநிறுத்தப்பட உள்ளதாக அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை மீறாது என்றும் அமெரிக்கா இதுபோல் அவர்களது நட்பு நாட்டில் அணு ஆயுதங்களை நீண்ட காலமாகவே நிலை நிறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். பெலாரஸில் அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதியை ஜூலை 1-ம் தேதிக்குள் ரஷ்யா கட்டி முடித்து விடும் என்றும் அணு ஆயுதங்களை ஏவுவதற்குப் பயன்படும் சிறிய எண்ணிக்கையிலான இஸ்காண்டர் ஏவுகணை அமைப்புகள் ஏற்கனவே பெலாரஸுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறினார். அதே நேரத்தில் ஆயுதங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு ரஷ்யாவிடம்தான் இருக்கும் என்றும் புதின் தெரிவித்தார். 1990-க்கு பிறகு நாட்டிற்கு வெளியே அணு ஆயுதங்களை ரஷ்யா நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.