உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றுவதற்கான போரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துவிட்டோம் : ரஷ்ய தனியார் ராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் தகவல்
May 25 2023 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றுவதற்கான போரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்களது வீரர்கள் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய தனியார் ராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகள் 50 ஆயிரம் பேரை குழுவில் இணைத்த நிலையில் 15 மாத போரில் 20 சதவீதம் பேர் பலியாகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். போரில் வெறும் 6 ஆயிரம் துருப்புக்களை மட்டுமே இழந்ததாக ரஷ்யா கூறி வரும் நிலையில் ப்ரிகோஜினின் பேச்சு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அதேநேரத்தில் பக்முத்திற்கான ஒன்பது மாத சண்டையில் மட்டும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பலியாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால் தங்கள் தரப்பு வீரர்கள் உயிரிழப்பு குறித்து உக்ரைன் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.