செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கூகுள் முன்னாள் சி.இ.ஒ. எரிக் ஸ்சிமிட்டின் கருத்தால் மீண்டும் சர்ச்சை
May 25 2023 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என கூகுள் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. எரிக் ஸ்சிமிட் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் புகழ்பெற்ற வால் ஸ்டீரீட் பத்திரிகையின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய எரிக், செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அபாயத்தை விளைவிக்கும் என கூறினார். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விளங்கிய எரிக்கின் கருத்தால் செயற்கை நுண்ணறிவு மிக ஆபத்தானது என கணிணி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான நபர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு செய்துவிடுவதால் கணிணி பட்டப்படிப்பு படித்த பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.