திப்பு சுல்தானின் படுக்கை அறை வாள் ரூ.142 கோடிக்கு லண்டனில் ஏலம் : அதிக விலைக்கு ஏலம் போன இந்திய பொருள்
May 25 2023 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டனில் திப்பு சுல்தானின் படுக்கை அறை வாள் 142 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 18-ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னன் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தின்போது போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி போன்றவற்றை லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஏலம் விட்டது. இதில், திப்பு சுல்தானின் தங்க முலாம் பூசப்பட்ட வாள் 142 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த வாள், இந்திய மற்றும் இஸ்லாமிய பொருட்களில் அதிக விலைக்கு ஏலம் போன பொருள் என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.