தென்னாப்பிரிக்காவில் ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் 1 வயது குழந்தை பலி : மேலும் தாய் மற்றும் மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதி
May 26 2023 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்பிக்கா குலோனி உள்விளையாட்டுப் பூங்கா ஒன்றில் ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாட்டு பூங்காவில் நிக்கோல் பானோஸ் என்பவர், அவரது 2 குழந்தைகளுடன் பூங்காவில் நடந்து சென்றார். அப்போது, அங்கிருந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்று தாக்கியதில், குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாய் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.