அதிபர் தேர்தலில் மீண்டும் வாகை சூடிய ரசிப் தயீப் எர்டோகன் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த துருக்கி தேர்தல் ஆணையம்
May 29 2023 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 15-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கெமால் கிலிக்சத்ரோவும் களம் கண்டனர். ஆனால் இருவருமே 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெறாததால் நேற்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று எர்டோகன் வெற்றி பெற்றார். இதனை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.