இத்தாலியில் அடர்பச்சை நிறமாக காட்சியளிக்கும் புகழ்பெற்ற ரியால்டோ கால்வாய் : தண்ணீரின் நிறம் மாறியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை
May 29 2023 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியின் புகழ்பெற்ற ரியால்டோ கால்வாய் நீரின் நிறம் மாறியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாலியின் வெனிஸ் பகுதியில் புகழ்பெற்ற ரியால்டோ கால்வாய் அமைந்துள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் இந்த கால்வாயில் படகு சவாரி மேற்கொள்வர். தற்போது, கால்வாயில் உள்ள நீரின் நிறம் வழக்கத்தை விட அடர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. தண்ணீரின் நிறம் மாறியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.