மலேசிய விமான நிலையத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானம் - 33 கோடி ரூபாய் அளவுக்கு பாக்கி தொகையை செலுத்தாததால் நடவடிக்கை
May 31 2023 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளநிலையில், அந்நாட்டு விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் குத்தகை முறையில் மலேசியாவிடமிருந்து போயிங் 777 வாங்கியுள்ளது. இதற்கு தவணை முறையில் பணம் மலேசியாவுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி அளவுக்கு பாக்கி தொகையை செலுத்தவில்லை. இது தொடர்பான வழக்கில் மலேசிய நீதிமன்றம், விமானத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் விமானம் மலேசியா நாட்டு விமான நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்டது.