சூடானில் ஆதரவற்ற குழந்தைகள் 60 பேர் உயிரிழந்ததாக தகவல் : உணவு தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருத்து
Jun 2 2023 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூடானில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக 60 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக போர் நிலவி வருகிறது. போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், போரின் எதிரொலியாக தலைநகர் கார்டூமில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் ஆறு வாரங்களில் மட்டும் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உணவு தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.