இந்திய மீனவர்கள் 200 பேரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் அறிவிப்பு
Jun 2 2023 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய மீனவர்கள் 200 பேரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 12ம் தேதி 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்த நிலையில், மேலும் 200 இந்தியர்களை விடுதலை செய்ய உள்ளதாக பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். இதில் 3 பேர் மீனவர் அல்லாத இந்தியர் என்றும், மனிதாபிமான விஷயங்களை அரசியலோடு ஒப்பிட்டு செல்லக்கூடாது என்ற கொள்கையில் பாகிஸ்தான் அரசு உடன்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.