சீனாவில் 13 ஆண்டுகளாக கண்டெய்னரில் கேட்பாரற்றுக் கிடக்கும் 3 டெஸ்லா கார்கள்... அதிக தொகைக்கு ஏலம் விட முடிவு
Jun 6 2023 7:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
13 ஆண்டுகளாக சீன துறைமுகத்தில் கண்டெய்னர்களில் அடைபட்டுக் கிடக்கும் மூன்று புத்தம் புதிய டெஸ்லா கார்கள் சாதனை தொகைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2010-ம் வருட தயாரிப்பான டெஸ்லா கார்கள் சீனாவின் குயிங்டாவோ துறைமுக கண்டெய்னரில் கண்டுபிடிக்கப்பட்டது. கார்களை ஆர்டர் செய்த சீன நபர் அந்தக் கார்களை எடுக்காமலேயே விட்டு விட்டார். தற்போது அந்தக் கார்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா ஸ்பெஷலிஸ்ட் க்ரூபர் மோட்டார் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்துகிறது. மூன்று கார்களுக்கும் 2 மில்லியன் டாலர்கள் ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், விற்பனை முடிந்தால், ஒவ்வொரு காரின் மதிப்பும் 6 லட்சத்து 66 ஆயிரத்து 666 டாலராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.