இந்திய மலைப்பாம்பு வடிவத்தில் நாசா உருவாக்கி வரும் ரோபோ : நிலவு, செவ்வாய் கிரகத்தில் கடினமான பகுதிகளை ஆராயத் திட்டம்
Nov 15 2023 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யப்படாத பகுதிகளை ஆராய்வதற்காக பாம்பை போன்ற ரோபோவை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சோதனை செய்து வருகிறது. இந்தியாவின் நாக்பூரில் படித்து, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணிபுரியும் ரோஹன் தாக்கர் என்ற பொறியாளர், இந்திய மலைப்பாம்பின் வடிவத்தில் பாம்பு ரோபோவை உருவாக்கியுள்ளார். எக்ஸோபயாலஜி எக்ஸ்டான்ட் லைஃப் சர்வேயர் என்று பெயரிடப்பட்டுள்ள பாம்பு ரோபோ, புத்திசாலித்தனமானது என்றும் கடுமையான நிலப்பரப்புகளைக் கடக்கக்கூடியது வகையில் வளைந்து நெளியக்கூடியதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாறை இடுக்குகளில் ஊர்ந்து செல்லவும், நீருக்கடியில் நீந்தவும் இதனால் முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.