பாகிஸ்தானில் சாலையில் நின்று கொண்டிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி மீது துப்பாக்கி சூடு : மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு தீவிரவாதிகள் பலி - ஐ.எஸ்.ஐ. அதிர்ச்சி
Nov 15 2023 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த இரு தீவிரவாதிகள் பலியானார்கள். பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் ஐ.எஸ்.ஐ. அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், மீண்டும் தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் மாவட்டத்துக்கு உட்பட்ட கோக்ரான் சவுக் பகுதியில் கடை முன்பு நின்று கொண்டிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த முசாமில், அவரது நண்பர் நைமூர் ரஹ்மான் மற்றொருவர் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் முசாமில், நைமூர் ரஹ்மான் சம்பவ இடத்தில் பலியான நிலையில் காயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.