காசாவில் உடனடி மனிதாபிமான உதவி-ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றம் : தீர்மானத்தைப் புறக்கணித்த அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து
Nov 17 2023 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நீடிக்கும் நிலையில் காசாவில் உடனடி மனிதாபிமான உதவிக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசாவுக்கு நிவாரண உதவிகளை தடையின்றி கொண்டு செல்லவும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் கோரியும் ஜோர்டன் நாடு கடந்த அக்டோபர் 27-ம் தேதி ஐநாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத் தீர்மானம் வெற்றி அடைந்த நிலையில் தற்போது காசாவில் உடனடியாக நிவாரண உதவிகள் தடையின்றி சென்று சேரவும், ஹமாஸ் படையினர் நிபந்தனையின்றி பணயக் கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்துள்ளன.