இந்துக் கோயில்கள் தாக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் : பாதுகாப்பு அளிக்குமாறு கனடா அரசுக்கு இந்திய வம்சாவளி எம்பி வலியுறுத்தல்
Nov 21 2023 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளால் இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதால் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா வலியுறுத்தி உள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதில் இருந்து கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்துக்கோயில்கள் தாக்கப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இந்தநிலையில், சர்ரேயில் உள்ள லக்ஷ்மி நாராயண் கோயில் மீது தாக்குதல் நடத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா கூறியுள்ளார். எனவே இந்துகோயில்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அவர் கனட அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.