அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்
Mar 23 2017 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஸ்கான்சின் மத்தியப் பகுதியில் உள்ள Rothschild என்ற இடத்தில் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில், மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதேபோல், அருகிலுள்ள பகுதியிலும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இச்சம்பவங்களில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.