துருக்கி அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த பரிதாபம்
Mar 25 2017 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கி நாட்டின் ஏஜியன் கடற்கரையை ஒட்டி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகளாக தஞ்சம் கோரி, மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது தொடர்கதையாக உள்ளது.
இதன்படி, சிரியாவில் இருந்து துருக்கி வழியாக, ஐரோப்பிய நாடுகளுக்கு, 30க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று சென்றுள்ளது. ஆனால், எதிர்பாராதவிதமாக, ஏஜியன் கடலோரத்தில் இந்த படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். தண்ணீரில் தத்தளித்த 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய நபர்களை தேடி வருவதாக, துருக்கி கடலோரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.