தென்னாப்பிரிக்காவில் கண்டெய்னர் கிடங்கில் பயங்கர தீ விபத்து : தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
Mar 25 2017 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய கடற்கரை நகரமான டர்பனில், Roosburgh என்ற இடத்தில்
கண்டெய்னர் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கண்டெய்னர் கிடங்கு அருகே மெழுகு தயாரிப்புக்கூடம் இருந்ததால் தீ வேகமாகப் பரவியதாக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். கிடங்கு அமைந்துள்ள இடத்தையொட்டி நெடுஞ்சாலை அமைந்துள்ளதால், சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.