மெக்சிகோவில் பிரம்மாண்ட விழாவில் 3,400 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்
Mar 26 2017 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 3 ஆயிரத்து 400 ஜோடிகள் பங்கேற்று திருமணம் செய்து கொண்டனர்.
மெக்சிகோ நகரில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட திருமண விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், 3 ஆயிரத்து 400 ஜோடிகள் பங்கேற்று திருமணம் செய்து கொண்ட நிகழ்வு சாதனையாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஜோடிகளை விட இந்த ஆண்டு அதிகம் பேர் பங்கேற்றுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.